Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Sunday, June 19, 2005

அப்பாவிற்கு அன்பைக் கூறல்

துளிர்த்து வளர்ந்து இறந்து
மீண்டும் பிறந்து
உலகை அளந்து
ஆழக் கடலில் எங்கு புதைந்துள்ளதுன் இருப்பு

உறங்கிக் கிடந்த எரிமலையைக் கீற
காமந் தாங்காது அது சீறி வெடிக்க
கடலைத் தாண்டி நெருப்பு பீரிட
அடடா அழிவு என்றபடி
திறந்த சன்னல்களை மூடிப் போகும்
தம்பிகளின் குருவாய்
கல்விச் சுமை கடமை எனத் தடங்குவதும்
அமுக்குவதுமாய் அடக்க
எளிதாய் என்னுள் இறங்குது வீரம்

கால்களின் உளைவோ
கண்களின் கடுமையோ தகர்த்து
எமக்கான கணங்களில்
எமக்கான மணிகளில்
எமக்கான சுதந்திரம், சுதந்திரமானது

ஆழப் புதைந்த வேர்களின் நாற்றம் எடுத்து
புண்ணின் வலியில் கிளலும் ஆண்மை பின்னெடுத்து
அப்பாவிற்கு அன்பைக் கூறல்
நிகழ்ந்தது

நிகழும்.
~

ஏப்ரல் 07, 2000
12:32 p.m.

Comments on "அப்பாவிற்கு அன்பைக் கூறல்"

 

post a comment