Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Monday, May 16, 2005

அக்காவும் நானும்


****

இரும்புக் கட்டில், திரைச் சீலைகள்
யன்னல் ஊடே ஒளி
கண்களை அடிக்கும்.
தூரத்துப் பார்வை போல்
அண்மையும் அழியுமோ என
விழி ஒளித் தெறிப்பில் பயம் புகும்

அருகில்
களைப்புடன் அக்கா
உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஓய்ந்து கிடந்த மெல்லிய பாதங்களை
வருட வேண்டிய
அவளது கனவுகளுக்குரியவன்
தூர தேசத்தில்
ஒரு பகலில்
இயங்கிக் கொண்டிருப்பான்
அல்லது அலைக்கழிந்து கொண்டிருப்பான்

அப்போது:
அன்று அவன் கேட்ட
"அவளிலா என்னிலா"வுக்கு உரிய அவள்
நட்சத்திரங்கள் கை காட்டிய
தீர்கக் தரிசனங்களை
எதிர்பார்த்திருப்பாள்.
~


4:08பகல், மே 31, 2000.

Tuesday, May 10, 2005

கதை 03

முயற்சித்த சிறு புனைவு 01:

முடிக்கப்படாத ஒரு பிரதியிலிருந்து சில பகுதிகள்

இதில் 'சந்திப்பு:ஜனனி' என்கிற ஒரு பகுதி
உயிர்நிழல் சஞ்சிகையில் பிரசுரமானது (august 2001).

இங்கும் படிக்கலாம் http://www.exilivre.com/nouvelle.php
ஆனால் format குழப்பியுள்ளது. வெவ்வேறு பகுதிகள் பிரிக்கப்படாமல் போடப்பட்டுள்ளது/

இந்தப் புனைவோடு தொடர்புடைய சில கவிதைகள், வேறு பகுதிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பரீட்சாத்த முயற்சி.

இதுசார்ந்த பிரதிகள் 2000-2001 பகுதிகளில் எழுதப்பட்டவை.

Sunday, May 08, 2005

கவிதைகள் எழுதும் அவள்

"அவள் கவிதைகள் எழுதுவாள்"
அம்மா சொல்லியபடி இருப்பாள்

இளமாலை நேரம்:
மேசைக்கு முன்
கதிரையில் உட்கார்ந்திருப்பேன்
நாற்காலி இரட்டைக் காலில் நிற்கும்
'தேத்தண்ணியும் மிக்ஸரும்
மினரல் வோற்றரும்' வந்தபடி இருக்கும்
சிலவேளை, ''அங்க வரக் கூடாதா''
கத்தி விட்டுப் போவாள்
கூட,
என்னை இழுக்கும்
நான் மட்டுமே இரசிக்கும் இசை,
மார்பு தளர
இமைகள் சொருக
தொடைகள் இளக,
உடல் முழுதும் ஆக்கிரமிக்கும்

வார்த்தைகளால் சுவாசிக்க முடியா உலகில்
சஞ்சரிப்பேன்
அந்நியமாவேன்
ஒளி வீச்சுள் நிற்பேன்
பலகீனமாய் இருப்பேன்
தனிமைப் பட்டிருப்பேன்

புத்தகங்களால் ஆன எனது கனவு லோகத்தில்
அம்மா இளமையுடன் இருந்தாள்.
~


00
ஆயிற்று.


அம்மாவைப் பற்றி
என் பாட்டில் எழுதிக் கொண்டிருந்தேன்
கவிதை கவிதையாய்.
அவள் தன் பாட்டிற் கத்திக் கொண்டிருந்தாள்

நான்
கவிதைகளோடு கத்த வேண்டியதாயிற்று.
கத்தாதே என்று ரத்தங் கக்கி
இறந்தது கவிதை.

அவள்
காதுள் வந்து
குழைந்து, குரல் குறைத்து
கத்துகிறேன் என்காதே, சொல்வதைக் கேள்
சொற்களுள் பிடிபடா என் உலகைப் பற்றி
சொல்வதைக் கேள்,
இப்படி நான் இருக்க வேண்டியதாயிற்று
சொல்வதைக் கேள் என்றாள்

கவிதைகளை நான் அழிக்க வேண்டியதாயிற்று
~

யனவரி 25, 00- 9:05 p.m.